நிரூபித்து காட்டிய நடராஜன் – சுரேஷ் ரெய்னா வாழ்த்து


“இந்திய அணியின் மிகமுக்கிய வெற்றியில் எனது பங்களிப்பை எண்ணி மகிழ்கிறேன்!” என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரும் தமிழகத்தைச் சேர்ந்த வீரருமான நடராஜன் கூறியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2 -1 என கைப்பற்றியது. இந்த போட்டியில் 10 ஓவர்கள் வீசிய நடராஜன் 73 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைபற்றி இருந்தார். இறுதி ஓவரில் இங்கிலாந்து வெற்றி பெற 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் வரும் 6 ரன்களை மட்டுமே நடராஜன் கொடுத்தார். அதில் 3 டாட் பந்துகள் அடங்கும்.
இந்தப் போட்டியில் விளையாடிய அனுபவம் குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடராஜன், “இந்திய அணியின் மிகமுக்கியமான வெற்றியில் எனது பங்களிப்பு இருப்பதை எண்ணி மகிழ்கிறேன். இந்திய அணி வீரர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை, சகோதரத்துவ மிக்க பாசம், ஒருபோதும் குறையாத நம்பிக்கையும் தான் விளையாட்டில் எனக்கு தேவையானது. சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணியும் இறுதி வரை வெற்றிக்காக போராடியது. அதனால் இந்த வெற்றியின் சுவை தனி ரகம். ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி” என போஸ்ட் போட்டுள்ளார்.
Source : PuthiyaThalaimurai