தமிழகம் முழுவதும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை


தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் இயங்கி வரும் சூழலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தனியார் பேருந்துகள் இன்று இயக்கப்படவில்லை. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் 100 % இருக்கைகளையும் பயன்படுத்த வேண்டும், நாளொன்றுக்கு சராசரியாக 400 கிலோ மீட்டர் பேருந்து ஓட்டினால் மட்டுமே கணிசமான வருவாயை பெற முடியும்.டீசல் விலை உயர்ந்துள்ள இந்த சூழலில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் படி பேருந்துகளை இயக்கினால் இழப்பை சந்திக்க நேரிடும் என்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் தனியார் பேருந்துகள் இன்று இயக்கப்படவில்லை. திருச்சி மாவட்டம் மற்றும் மாநகரில் மட்டும் 297 தனியார் பேருந்துகள் இயங்கவில்லை.