10,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள்: 13,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு, முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்து


சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில் துறை சார்பில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், விழுப்புரம், மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் 8 தொழில் நிறுவனங்களுடன் 10,399 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது இத்திட்டத்தின் மூலம் சுமார் 13,507 நபருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். 8 திட்டங்களில் 5 திட்டங்களுக்கு நேரடியாகவும் 3 திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டன.1. காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள தொழில் பூங்காவில் விக்ரம் சோலார் நிறுவனம் 5423 கோடி ரூபாய் முதலீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன் மூலம் சுமார் 7542 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
2. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் 250 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்பூங்கா திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன் மூலம் சுமார் 1500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்3. கோவை மாவட்டத்தில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் Aquasub நிறுவனத்தின் Ductile Iron Foundry திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன் மூலம் சுமார் 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
4. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 200 கோடி ரூபாய் முதலீட்டில் NDR infrastructure நிறுவனத்தின் சார்பில் 125 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா திட்டத்திற்கான ஒப்பந்தம்.
5. விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 36 கோடி ரூபாய் முதலீட்டில் முந்திரி பதப்படுத்தும் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன் மூலம் சுமார் 465 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
6. செங்கல்பட்டு மாவட்டம் சிங்க பெருமாள் கோவில் ஒரகடம் நெடுஞ்சாலையில் 4,000 கோடி ரூபாய் முதலீட்டில் Hiranandani நிறுவனத்தின் தகவல் தரவு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன் மூலம் 2500 நபர்கள் வேலைவாய்ப்பு பெறுவர்.
7. கோயம்புத்தூர் மாவட்டத்தில் 250 கோடி ரூபாய் முதலீட்டில், ELGI equipments நிறுவனத்தின் Air Compressor உற்பத்தி திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது இதன்மூலம் சுமார் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.
8. ஈரோடு மாவட்டம் சிப்காட் பெருந்துறை தொழில் பூங்காவில் 40 கோடி ரூபாய் முதலீட்டில், JS auto cast நிறுவனத்தின் Foundry விரிவாக்க திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் எம் சி சம்பத், தலைமை செயலாளர் சண்முகம், தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்