மயிலாடுதுறையில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தாய்-குழந்தையை காப்பாற்றிய இன்ஸ்பெக்டர்!



மயிலாடுதுறை அருகே உள்ள சோழம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் மங்களம்(வயது 65). இவர், நேற்று காலை மயிலாடுதுறை ெரயில் நிலையத்தில் இருந்து சோழன் எக்ஸ்பிரஸ் ெரயில் மூலம் சென்னை சென்றார். அவரை வழியனுப்புவதற்காக அவரது மகள்கள் தையல்நாயகி(32), கவிதா(30) ஆகியோர் துணையாக வந்தனர். மங்களத்தை ரெயிலில் ஏற்றி இருக்கையில் அமர வைத்து விட்டு இருவரும் தாயுடன் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது ரெயில் புறப்பட்டு உள்ளது. இதனை அறிந்த சகோதரிகள் இருவரும் அவசர, அவசரமாக ெரயிலை விட்டு இறங்கினர்.
முதலில் தையல்நாயகி ெரயிலில் இருந்து இறங்கினார். அவரைத் தொடர்ந்து கவிதா தனது குழந்தையுடன் ரெயிலில் இருந்து இறங்கினார். அப்போது அவர் தடுமாறி ஓடும் ரெயிலில் இருந்து கீழே விழுந்தார். அந்த நேரத்தில் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுதிர்குமார் இந்த சம்பவத்தை பார்த்தார்.
உடனடியாக ஓடிச்சென்ற அவர் ஓடும் ரெயிலில் இருந்து தடுமாறி கீழே விழுந்த கவிதாவையும் அவரது குழந்தையையும் தனது கால்களால் தாங்கி பிடித்து, இருவரையும் எந்தவித காயமும் இன்றி காப்பாற்றினார். இதில் இன்ஸ்பெக்டர் சுதிர்குமார் காலில் லேசான காயம் ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், சகோதரிகள் கவிதா,தையல்நாயகி ஆகியோரிடம் ஓடும் ரெயிலில் ஏறவோ, இறங்கவோ கூடாது என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
தன் உயிரையும் பொருட்படுத்தாமல் ஓடிச்சென்று தாயையும், குழந்தையையும் காப்பாற்றிய ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுதிர்குமாருக்கு ரெயில்வே பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது