செம்பனார்கோவில் அருகே கிடாரங்கொண்டான் கிராமத்தில் நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் அதிகாரி ஆய்வு!



செம்பனார்கோவில் அருகே கிடாரங்கொண்டான் கிராமத்தில் அமைந்துள்ள நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரி கிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் அரிசியின் தரம் குறித்தும், எடை அளவு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அதனைத்தாடர்ந்து, தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள 90 ரேஷன் கடைகளுக்கும் தரமான அரிசி அனுப்பி வைத்திடவும், தட்டுப்பாடு இன்றி அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைத்திட வேண்டும் என்று கிடங்கு தரக்கட்டுப்பாட்டு அலுவலருக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பாபு, கிடங்கு உதவி தரக்கட்டுப்பாட்டு அலுவலர் ராகவன் ஆகியோர் உடனிருந்தனர்.
Advertisement