தில்லையாடி வள்ளியம்மை அவர்களின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தில்லையாடி ஊராட்சியில் தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் தியாகி தில்லையாடி வள்ளியம்மை அவர்களின் பிறந்தநாளையொட்டி அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் நா.உமாமகேஷ்வரி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். உடன் சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் அவர்கள், தரங்கம்பாடி வட்டாட்சியர் மகேஷ் அவர்கள், செம்பனார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி அவர்கள் உள்ளனர்