மயிலாடுதுறை மயூர நாட்டியாஞ்சலி இன்று தொடக்கம்

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் 19-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி ஞாயிற்றுக்கிழமை (23.02.2025) தொடங்குகிறது.

மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை கடந்த 18 ஆண்டுகளாக மயூர நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி வருகிறது. தொடர்ந்து இந்த ஆண்டும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி புதன்கிழமை (பிப்.26) வரை 4 நாட்கள் நடைபெறுகிறது. தொடர்ந்து 4 நாட்களும் மாலை 5.30 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சிகள் நள்ளிரவு வரை நடைபெறும். மேலும் இவ்விழாவில், இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் 500-க்கு மேற்பட்ட நாட்டியக் கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.