பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி, அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக மாதத்தின் கடைசிப் பணி நாளன்று ஒத்திசைவுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுவதில்லை. இம்மாதத்தின் கடைசிப் பணிநாளான 29.03.2025 அன்று சனிக்கிழமையாக அமைகிறது. மேலும், அதனைத் தொடர்ந்து வரும் 30.03.2025 அன்று தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் 31.03.2025 அன்று ரம்ஜான் பண்டிகையினை முன்னிட்டு அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் விடுமுறை நாட்களாகும்.
எனவே, இம்மாதத்தின் கடைசி இரண்டு நாட்கள் நியாய விலைக் கடைகளுக்குப் பொது விடுமுறை தினங்களாக வருவதால், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி வருகின்ற 29.03.2025 அன்று அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்பட்டு, வழக்கம் போல் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை 29.03.2025 அன்றும் நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.
Top News
-
10வது தேர்ச்சி போதும்…மத்திய அரசு மெட்ராஸ் உர நிறுவனத்தில் வேலை – 43 காலியிடங்கள் || மாதம் ரூ.21,500 சம்பளம்… உடனே விண்ணப்பிக்கவும்! MFL Recruitment 2026
-
🏛️ பூம்புகார் சட்டமன்றத் தொகுதி: ஒரு வரலாற்றுப் பார்வை (1962 – 2021)
-
தமிழ்நாடு உப்பு கழகத்தில் சூப்பர்வைசர் வேலை – மாதம் ரூ.35,000 சம்பளம் || உடனே விண்ணப்பிக்கவும் TNSC Recruitment 2026
-
நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் செ. சிவச்சந்திரன்: மாணவி மரணத்திற்குத் தூக்குத் தண்டனை கோரிக்கை!
-
மயிலாடுதுறை தேர்தல் பிளாஷ்பேக்: 1967 முதல் 2021 வரை ஒரு முழுமையான பார்வை!


