பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி, அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக மாதத்தின் கடைசிப் பணி நாளன்று ஒத்திசைவுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுவதில்லை. இம்மாதத்தின் கடைசிப் பணிநாளான 29.03.2025 அன்று சனிக்கிழமையாக அமைகிறது. மேலும், அதனைத் தொடர்ந்து வரும் 30.03.2025 அன்று தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் 31.03.2025 அன்று ரம்ஜான் பண்டிகையினை முன்னிட்டு அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் விடுமுறை நாட்களாகும்.
எனவே, இம்மாதத்தின் கடைசி இரண்டு நாட்கள் நியாய விலைக் கடைகளுக்குப் பொது விடுமுறை தினங்களாக வருவதால், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி வருகின்ற 29.03.2025 அன்று அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்பட்டு, வழக்கம் போல் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை 29.03.2025 அன்றும் நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.
Top News
-
சீர்காழி: அதிமுக ஆட்சியில் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும் – வேட்பாளர் உறுதி
-
நடுக்கடலில் பரப்புரை! மீனவர்களை ஆச்சரியப்படுத்திய பூம்புகார் நாம் தமிழர் வேட்பாளர்!
-
மயிலாடுதுறை நீதிமன்றத்தில் சமரச விழிப்புணர்வு பேரணி: மாவட்ட நீதிபதி தொடங்கி வைத்தார்
-
வாகன சோதனையில் ரூ.83,490 பறிமுதல்: சீர்காழி தேர்தல் பறக்கும் படை அதிரடி!
-
தரங்கம்பாடி பகுதியில் உளுந்து அறுவடை தீவிரம்: போதிய மகசூல் இன்றி விவசாயிகள் கவலை!


