பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி, அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக மாதத்தின் கடைசிப் பணி நாளன்று ஒத்திசைவுப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுவதில்லை. இம்மாதத்தின் கடைசிப் பணிநாளான 29.03.2025 அன்று சனிக்கிழமையாக அமைகிறது. மேலும், அதனைத் தொடர்ந்து வரும் 30.03.2025 அன்று தெலுங்கு வருடப்பிறப்பு மற்றும் 31.03.2025 அன்று ரம்ஜான் பண்டிகையினை முன்னிட்டு அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் விடுமுறை நாட்களாகும்.
எனவே, இம்மாதத்தின் கடைசி இரண்டு நாட்கள் நியாய விலைக் கடைகளுக்குப் பொது விடுமுறை தினங்களாக வருவதால், அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி வருகின்ற 29.03.2025 அன்று அனைத்து நியாய விலைக் கடைகளும் செயல்பட்டு, வழக்கம் போல் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். குடும்ப அட்டைதாரர்கள் தங்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை 29.03.2025 அன்றும் நியாய விலைக் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம்.
Top News
-
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு வேலை: இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!
-
மயிலாடுதுறை மாவட்ட மாணவர்களுக்கு நற்செய்தி: ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?
-
மயிலாடுதுறை மக்களுக்கு அவசர எச்சரிக்கை! தீவிரமடையும் பருவமழை: சீர்காழி, பூம்புகார் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார்
-
மயிலாடுதுறை: கழிப்பறை இருந்தும் காவிரி படுகையை நாடும் பள்ளி மாணவர்கள் – சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
-
மயிலாடுதுறை: குத்தாலத்தில் செப்டம்பர் 18-இல் பிரம்மாண்ட தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!


