விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், திருக்குணம் மதுரா கொசப்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற வாய்க்கால் பராமரிப்புப் பணியின்போது வாய்க்கால் நடுவிலிருந்த பாறையை அகற்றும் பொருட்டு (23.3.2025) மாலை அப்பாறையை வெடிவைத்து தகர்த்தபோது சிதறிய கருங்கல் எதிர்பாராதவிதமாக அருகிலிருந்த விவசாய நிலத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த முத்துலட்சமி என்பவரின் மகள் காயத்திரி (வயது 10) என்பவரின் தலையின் மீது விழுந்ததில் பலத்த காயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இந்தச் சம்பவத்தில் விபத்தில் உயிரிழந்த சிறுமி காயத்திரியின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
Top News
-
10வது தேர்ச்சி போதும்…மத்திய அரசு மெட்ராஸ் உர நிறுவனத்தில் வேலை – 43 காலியிடங்கள் || மாதம் ரூ.21,500 சம்பளம்… உடனே விண்ணப்பிக்கவும்! MFL Recruitment 2026
-
🏛️ பூம்புகார் சட்டமன்றத் தொகுதி: ஒரு வரலாற்றுப் பார்வை (1962 – 2021)
-
தமிழ்நாடு உப்பு கழகத்தில் சூப்பர்வைசர் வேலை – மாதம் ரூ.35,000 சம்பளம் || உடனே விண்ணப்பிக்கவும் TNSC Recruitment 2026
-
நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் செ. சிவச்சந்திரன்: மாணவி மரணத்திற்குத் தூக்குத் தண்டனை கோரிக்கை!
-
மயிலாடுதுறை தேர்தல் பிளாஷ்பேக்: 1967 முதல் 2021 வரை ஒரு முழுமையான பார்வை!


