விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், திருக்குணம் மதுரா கொசப்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற வாய்க்கால் பராமரிப்புப் பணியின்போது வாய்க்கால் நடுவிலிருந்த பாறையை அகற்றும் பொருட்டு (23.3.2025) மாலை அப்பாறையை வெடிவைத்து தகர்த்தபோது சிதறிய கருங்கல் எதிர்பாராதவிதமாக அருகிலிருந்த விவசாய நிலத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த முத்துலட்சமி என்பவரின் மகள் காயத்திரி (வயது 10) என்பவரின் தலையின் மீது விழுந்ததில் பலத்த காயமடைந்த சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
இந்தச் சம்பவத்தில் விபத்தில் உயிரிழந்த சிறுமி காயத்திரியின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
Top News
-
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு வேலை: இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!
-
மயிலாடுதுறை மாவட்ட மாணவர்களுக்கு நற்செய்தி: ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி?
-
மயிலாடுதுறை மக்களுக்கு அவசர எச்சரிக்கை! தீவிரமடையும் பருவமழை: சீர்காழி, பூம்புகார் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார்
-
மயிலாடுதுறை: கழிப்பறை இருந்தும் காவிரி படுகையை நாடும் பள்ளி மாணவர்கள் – சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
-
மயிலாடுதுறை: குத்தாலத்தில் செப்டம்பர் 18-இல் பிரம்மாண்ட தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!


