ஃபெஞ்சல் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழை கொட்டியது. இதனால் பல்வேறு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. திருவண்ணாமலையில் கோவில் பின்புறம் நேற்று திடீர் மண்சரிவு ஏற்பட்டது. அப்போது 3 வீடுகள் மண்ணில் புதைந்தது. மண்சரிவின்போது வீட்டிற்குள் இருந்த 7 பேர் கதி என்ன என்று தெரியவில்லை. அந்த பகுதியில் மீட்பு குழுவினர் திவிரமாக பணி செய்து வருகின்றனா்.எனினும் 18 மணி நேரங்கள் ஆகியும் மண்சரிவில் சிக்கியவர்கள் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது திருவண்ணாமலையில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை கோவில் பின்புறம் நேற்று நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தின் அருகே இன்று மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. நிலச்சரிவால் மக்கள் அச்சத்தில் உள்ளனா்.
Top News
-
சீர்காழி: அதிமுக ஆட்சியில் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படும் – வேட்பாளர் உறுதி
-
நடுக்கடலில் பரப்புரை! மீனவர்களை ஆச்சரியப்படுத்திய பூம்புகார் நாம் தமிழர் வேட்பாளர்!
-
மயிலாடுதுறை நீதிமன்றத்தில் சமரச விழிப்புணர்வு பேரணி: மாவட்ட நீதிபதி தொடங்கி வைத்தார்
-
வாகன சோதனையில் ரூ.83,490 பறிமுதல்: சீர்காழி தேர்தல் பறக்கும் படை அதிரடி!
-
தரங்கம்பாடி பகுதியில் உளுந்து அறுவடை தீவிரம்: போதிய மகசூல் இன்றி விவசாயிகள் கவலை!


