மயிலாடுதுறையிலிருந்து வைத்தீஸ்வரன் கோயிலுக்குத் தங்கள் ஆன்மீகப் பயணமாக பாதயாத்திரையில் செல்லும் சுமார் ஒரு லட்சம் பக்தர்களுக்கு ரோட்டரி சங்கங்கள் இணைந்து உதவியுள்ளனர்.
காரைக்கால் ரோட்டரி சென்டினியல் சங்கமும், மயிலாடுதுறை கிங்ஸ் ரோட்டரி சங்கமும் இணைந்து, மூன்று லட்சம் ரூபாய் செலவில், பாதயாத்திரைக் பக்தர்களுக்கு காலை நேர சிற்றுண்டி, மதிய உணவாக – சர்க்கரைப் பொங்கல், புளிசாதம், தயிர்சாதம், இரவு, உணவாக – புளிசாதம், தயிர்சாதம், நீர்மோர், தேநீர், குளிர்பானங்கள் போன்றவற்றை வழங்கினர்.
இந்த சேவை மூலம் பாதயாத்திரைப் பயணத்தில் பசியும், தாகமும் களைந்து பக்தர்கள் இளைப்பாற, ஆன்மீகப் பயணத்தை தொடர்ந்து செல்ல உதவியது.
இந்த முயற்சிக்கு வித்திட்ட அனைத்து ரோட்டரி உறுப்பினர்களுக்கும் பக்தர்கள் நன்றி கூறியவாறு சென்றனர்.