செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், பழைய மாமல்லபுரம் சாலை, பையனூர் மதுரா பண்டிதமேடு சந்திப்பில் இன்று (27.11.2024) பிற்பகல் 02.20 மணியளவில் திருப்போரூர் வட்டம், பையனூர் கிராமம், பாளையத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த திருமதி.ஆந்தாயி (வயது 71) க/பெ.முத்தன், திருமதி.லோகம்மாள் (வயது 56) க/பெ.சின்ராஜ், திருமதி.யசோதா (வயத 54) க/பெ.கோவிந்தசாமி, திருமதி.விஜயா (வயது 53) க/பெ.சாமிநாதன் மற்றும் திருமதி.கௌரி (வயது 52) க/பெ.குப்பன் ஆகிய 5 பெண்கள் சாலையோரத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது திருப்போரூரிலிருந்து மாமல்லபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த TN11 J 7270 என்ற பதிவெண் கொண்ட கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் மேற்குறிப்பிட்ட 5 பெண்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.மேலும், இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
Top News
-
மயிலாடுதுறையில் 3 நாட்கள் மட்டுமே நடைபெறும் சிறப்புப் பதிவு முகாம்: பொதுமக்கள் பயனடைய ஆட்சியர் வேண்டுகோள்!
-
மயிலாடுதுறையில் அதிரடி: 18 இருசக்கர வாகனங்களை திருடிய தொடர் பைக் திருடன் கைது!
-
சீர்காழி அரசு மருத்துவமனையில் சோகம்: உயிருக்குப் போராடிய பெண்! சாப்பிடச் சென்ற மருத்துவரால் மக்கள் கொதிப்பு!
-
நேபாள வெள்ளப் பேரிடரில் இருந்து உயிர் தப்பிய மயிலாடுதுறை தம்பதி: ‘திக் திக்’ நிமிடங்களை பகிர்ந்த நெகிழ்ச்சி அனுபவம்!
-
மயிலாடுதுறையில் அரசு ஒப்பந்த பணிகள்: பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

