கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டுமான பணிகள் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட ஆறுபாதி ஊராட்சி மேலகிராமத்தில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளி வீடு கட்டி வருவதை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள் நேரில் பார்வையிட்டு கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்கள். உடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனா அவர்கள், மஞ்சுளா அவர்கள் உள்ளனர்.