செய்தியாளர் போர்வையில் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது: மயிலாடுதுறையில் பரபரப்பு

மயிலாடுதுறையில் 16 கிலோ கஞ்சா பறிமுதல்; செய்தியாளர் அட்டையுடன் கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை அருகே ரயிலில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினரிடம், கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு நபர் தினசரி பத்திரிகை ஒன்றின் அடையாள அட்டையை காட்டி தப்பிக்க முயன்றபோது போலீசார் கைது செய்தனர்.