உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களின் மாமனார் நாகேஸ்வர் பிரசாத் சாகே, இ.கா.ப., (ஓய்வு) அவர்களின் மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி.

உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், இ.ஆ.ப., அவர்களின் மாமனார் நாகேஸ்வர் பிரசாத் சாகே, இ.கா.ப., (ஓய்வு) (வயது 85) அவர்கள் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொலைபேசி வாயிலாக  தீரஜ் குமார், இ.ஆ.ப., அவர்களை தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
மேலும், அவரை இழந்து வாடும் திரு. தீரஜ் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் தனது ஆறுதலைத் தெரிவித்துக் கொண்டார்.