மயிலாடுதுறையில் தொழிலாளர் தின கிராம சபை கூட்டம் – பயனாளிக்கு வேளாண்மை உபகரணங்கள் வழங்கல்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம், சட்டநாதபுரம் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், வேளாண்மை துறை சார்பில் பயனாளிக்கு உபயோகப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர்  ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் இ.ஆ.ப., மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்  எம். பன்னீர்செல்வம் ஆகியோர் வழங்கும் செயலியை நேரில் துவக்கி வைத்தனர். நிகழ்வில் வேளாண்மை துறை இணை இயக்குநர்  சேகர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)  சந்தானம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்  செந்தில்குமார், விற்பனை மற்றும் வணிகத் துறை துணை இயக்குநர்  சுப்பையன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  திருமுருகன்,  சரவணன் மற்றும் வட்டாட்சியர்  அருள்ஜோதி ஆகியோர் பங்கேற்றனர்.