சட்டநாதபுரம் கிராம சபை கூட்டத்தில் தொழிலாளர் தின சிறப்பு நிகழ்வு – மாவட்ட ஆட்சியர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் உள்ள சட்டநாதபுரம் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு பார்வையாளர்களாக மாவட்ட ஆட்சியர்  ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் (இ.ஆ.ப.) மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்  எம். பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் வேளாண்மை துறை இணை இயக்குநர்  சேகர், ஊராட்சி உதவி இயக்குநர்  சந்தானம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்  செந்தில்குமார், வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை துணை இயக்குநர்  சுப்பையன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  திருமுருகன் மற்றும்  சரவணன் மற்றும் வட்டாட்சியர்  அருள்ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.