.தமிழகத்தில் பிளஸ்-1 தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதியுள்ள நிலையில்  பொதுத்தேர்வு முடிவுகள் வருகிற 14-ந்தேதி காலை 9.30 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் தேர்வு முடிவுகளை 14-ந்தேதி www.dge.tn.nic.in என்ற இணையதளம் மூலம் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு தேர்வுகள் இயக்ககத்தில் பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.