பாரளுமன்ற தேர்தலை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என்று கண்டறியப்பட்ட வாக்குச்சாவடிகளில் காவல்துறையினரால் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வருகின்ற 19.04.2024-ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலின் போது பதற்றமான வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் எவ்வித அச்சமின்றி வாக்களிக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாகவும் இன்று 16.04.2024-ம் தேதி மயிலாடுதுறை உட்கோட்டத்தில் மணல்மேடு காவல் சரகத்தில் N. திருப்பதி, துணைக்காவல் கண்காணிப்பாளர், மயிலாடுதுறை உட்கோட்டம் தலைமையில் ஆய்வாளர்கள் மணல்மேடு, செம்பனார்கோயில், காவல் ஆளினர்கள் மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கலந்துகொண்டு கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி தலைஞாயிறு கன்னிக்கோயில் மெயின் ரோட்டில் துவங்கி பட்டவர்த்தி கடைவீதியில் முடிவடைந்தது. இதில் 79 காவல்துறையினர் பங்கேற்றனர்.

இதே போல் சீர்காழி உட்கோட்டத்தில் ஆணைக்காரன்சத்திரம் காவல் சரகத்தில் ஆணைக்காரன்சத்திரம் காவல் ஆய்வாளர் தலைமையில் காவல் ஆளினர்கள் மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கலந்துகொண்டு கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி அரசூர் ரவுண்டானாவில் துவங்கி அரசூர் கடைவீதியில் முடிவடைந்தது. புதுப்பட்டினம் காவல் சரகத்தில் புதுப்பட்டினம் காவல் ஆய்வாளர் தலைமையில் காவல் ஆளினர்கள் மற்றும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் கலந்துகொண்டு கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி வடபாதி பேருந்து நிறுத்தத்தில் துவங்கி மாதானம் முத்துமாரியம்மன் கோயில் அருகில் முடிவடைந்தது.