தைவானின் வடகிழக்கு பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம், கடற்கரை நகரமான இலன் நகரை மையமாகக் கொண்டு ஏற்பட்டதாக தெரிய வருகிறது. ரிக்டர் அளவில் 5.8 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
சில விநாடிகள் கட்டிடங்கள் அதிர்ந்ததால் பொதுமக்கள் இடையூறாக அச்சமடைந்தனர். இருப்பினும், தற்போது வரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் மியான்மரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 3,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.