தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின்கீழ் பயின்ற பிளஸ்-1மாணவ, மாணவிகளுக்கு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 4ம் தேதி தொடங்கி 25 ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் எண்ணிக்கை  8 லட்சத்து 11 ஆயிரத்து 172 பேர் எழுதினர்.  இன்று பிளஸ்-1 தேர்வு முடிவுகள்வெளியாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்கம் அலுவலகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில் 91.17 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 241 அரசுப்பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. மொத்தம் 8 லட்சத்து 11 ஆயிரத்து 172 பேர் தேர்வு எழுதிய நிலையில் இதில் 7 லட்சத்து 39 ஆயிரத்து 539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வழக்கம்போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 87.26 சதவீதம் தேர்ச்சி பெற்ற நிலையில் மாணவிகள் 94.69 சதவீதம் தேர்ச்சி மாணவிகள் பெற்றுள்ளனர்.

முக்கியப் பாடங்களில் தேர்ச்சி சதவீதம்: 

இயற்பியல் – 97.23% 

வேதியியல் -96.20% 

உயிரியல் -98.25% 

கணிதம் -97.21%

தாவரவியல் -91.88%

விலங்கியல் -96.40%

கணினி அறிவியல் – 99.39% 

வணிகவியல் – 92.45%

கணக்குப் பதிவியல் – 95.22%