நாடாளுமன்ற தேர்தல் மயிலாடுதுறை தொகுதியில் வருகிற ஏப்ரல் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ பி மகாபாரதி தலைமையில் தேர்தல் பணிக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

மயிலாடுதுறை மாவட்ட அலுவலக கூட்டரங்கில் பாராளுமன்ற தேர்தலில் பதற்றமான வாக்குச்சவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள நுண்பார்வையாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் இணையதள மென்பொருள் செயலி வழியாக சட்டமன்ற தொகுதி வாரியாக முதல்கட்ட பணி ஓதுக்கீடு செய்யும் முறை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ பி மகாபாரதி தலைமையில், தேர்தல் நுண்பார்வையாளர் கன்ஹீராஜ் ஹச் பகதே முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் செல்வம், தனி வட்டாட்சியர் (தேர்தல்) விஜயராகவன் ஆகியோர் உடன் இருந்தனர்.