நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வருகிற 19-ந்தேதி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்பட பல்வேறு மாநிலங்களில் 102 தொகுதிகளில்  முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு தொடங்கவுள்ளது.  2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று வருகிற 26-ந்தேதி இரண்டம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

 

இந்த நிலையில் 94 தொகுதிகளுக்கான 3-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. 19-ந்தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டு 20-ந்தேதி பரிசீலனை செய்யப்படுகின்றன. 22-ந்தேதி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இதைத்தொடர்ந்து மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுக்கு மே 7-ந்தேதி நடைபெற உள்ளது.

 

2-ம் கட்ட தேர்தலில் ஒத்திவைக்கப்பட்ட மத்திய பிரதேசத்தின் பேதுல் தொகுதிக்கும் மேற்படி கால அட்டவணையில் 3-ம் கட்டத்தில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.

 

நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாக நாடு முழுவதும்  ஏப்ரல் 19, ஏப்ரல் 26, மே 7, மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.