நரேந்திர மோடி பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் ஜனாதிபதியை சந்தித்த நரேந்திர மோடி, பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதம் கொடுத்தார்.

17வது மக்களவையை கலைப்பதற்கான பரிந்துரையை பிரதமர் நரேந்திர மோடி குடியரசு தலைவரிடம் சமர்ப்பித்துள்ளார். மக்களவையை கலைத்த பின்னர் மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோர திட்டமிட்டு வருகிறது. ஜூன் 8ம் தேதி பிரதமராக மீண்டும் மோடி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.